பெருந்துறை அருகே விபத்தில்  இளைஞர் சாவு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே  இறந்தார். 

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே  இறந்தார். 
பெருந்துறையை அடுத்துள்ள சோளிபாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார்(36). வேன் உரிமையாளர். ஞாயிற்றுக்கிழமை  இரவு 8 மணியளவில் பெருந்துறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.  ஆசிரியர் காலனி மேம்பாலம் அருகே வந்தபோது ஒரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இது குறித்து பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com