மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் தறிப் பட்டறையில் வேலை செய்து வந்த தனது மகள் காணாமல் போனதாக தறிப் பட்டறை தொழிலாளி அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (45). தறிப் பட்டறை தொழிலாளி. இவரது மகள் மோனிஷா (17). அதே பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறைக்கு வேலைக்குச் சென்று வந்ததாகவும், ஏப்ரல் 11-ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மோனிஷா வீடு திரும்பவில்லை. கடந்த நான்கு நாளாக அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் காணவில்லையாம். இதுகுறித்து, மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் ஜெகநாதன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.