ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவையின் 29 ஆம் ஆண்டு இலக்கிய விழா அக்டோபர் 28 ஆம் தேதி செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு தமிழ்ச் சங்கம் உவமைக் கவிஞர் சுரதாவால் தொடக்கிவைக்கப்பட்டது. இதன் 29 ஆம் ஆண்டு இலக்கிய விழா ஈரோட்டில் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், கதை, மரபுக் கவிதை , புதுக் கவிதை, கட்டுரை, வெண்பா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குத் திருவள்ளுவர், ஒளவையார், ஒட்டக்கூத்தர், பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், வாரியார் ஆகியோரின் பெயர்களில் விருதுகளும் வழங்கப்படும்.
மேலும், துறை சார்ந்த விருதுகள், சாதனைச் செம்மல் விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கவிமாமணி சேலம் பாலன், நிறுவனர், தலைவர், ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை, 38, கிருட்டிணசாமி வீதி, நகராட்சிக் குடியிருப்பு, ஈரோடு- 638 004 அல்லது 91500- 52927 , 79044-75399 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.