வீணாகும் காவிரிக் குடிநீர்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

மொடக்குறிச்சி அருகே ஈரோடு - முத்தூர் சாலையில் காவிரிக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாக்கடையில் செல்கிறது.


மொடக்குறிச்சி அருகே ஈரோடு - முத்தூர் சாலையில் காவிரிக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாக்கடையில் செல்கிறது.
மொடக்குறிச்சியை அடுத்த அய்யகவுண்டன்பாளையம், குரங்கன் ஓடை அருகே செல்லாத்தாபாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 10 நாள்களாக காவிரிக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாக்கடையில் சென்று கலக்கிறது.
இக்குடிநீர் குழாய் மூலமாக அய்யகவுண்டன்பாளையம், செல்லாத்தாபாளையம், பாலிக்காடு, வேலம்பாளையம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு காவிரி ஆற்றுக் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குழாய் உடைப்பு காரணமாக மேற்கண்ட ஊர்களில் சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, காவிரி குடிநீர் இணைப்புகளை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்தான் சரி செய்ய வேண்டும். அவர்கள் தற்போது காவிரியாற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் தற்போது அங்கு பணியில் உள்ளனர். இதனால், தற்போது இதை சரி செய்ய இயலாது என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com