பவானி ஆற்றில் பரிசல் கவிழ்ந்ததில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

பவானி ஆற்றில் மீன் பிடிக்க வலை விரிக்கச் சென்றபோது, எதிர்பாராமல் பரிசல் கவிழ்ந்ததில் மாயமான பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. 

பவானி ஆற்றில் மீன் பிடிக்க வலை விரிக்கச் சென்றபோது, எதிர்பாராமல் பரிசல் கவிழ்ந்ததில் மாயமான பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. 
 பவானி, சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் பாபு (எ) யோகராஜ் (31). இவர், பவானி ஆற்றில் ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி ஜெயம்மாள் (50) என்பவருடன் மீன் பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு பண்டார அப்பிச்சி கோயில் அருகே பரிசலில் சென்றபோது எதிர்பாராமல் பரிசல் கவிழ்ந்ததில் இருவரும்  தண்ணீரில் மூழ்கினர். இதில், பாபுவின் சடலம் மீட்கப்பட்டது. 
 இந்நிலையில், ஆகாயத் தாமரைக்குள் சிக்கியிருந்த ஜெயம்மாளின் சடலம் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டது. இதுகுறித்து, பவானி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com