முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டி: ஈரோடு மாணவி தேர்வு

முதல்வர் கோப்பைக்கான மாநில நீச்சல் போட்டியில் பங்கேற்க ஈரோட்டைச் சேர்ந்த மாணவி தங்கம் ரூபினி தகுதி பெற்றுள்ளார்.

முதல்வர் கோப்பைக்கான மாநில நீச்சல் போட்டியில் பங்கேற்க ஈரோட்டைச் சேர்ந்த மாணவி தங்கம் ரூபினி தகுதி பெற்றுள்ளார்.
 முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கான போட்டிகள் அந்தந்த மாவட்டத்தில் நடத்தப்பட்டது.  அதேபோல, ஈரோடு வ.உ.சி பூங்கா நீச்சல் குளத்தில் டிசம்பரில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில், 14 வயதுக்கு உள்பட்ட மாணவியர் பிரிவில் பேக்ஸ்டிரோக், பிரஸ்ட்டிரோக், பட்டர்பிளை, ஃப்ரீஸ்டைல் ஆகிய நான்கு  வகைகளையும் உள்ளடக்கிய 200 மீட்டர், தனிநபர் மெட்லி (ஐ.எம்) பிரிவு, 50 மீட்டர் பட்டர்ஃபிளை ஆகிய இரண்டு போட்டியில் பங்கேற்ற ஈரோடு கலைமகள் பள்ளியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி தங்கம் ரூபிணி முதல் பரிசுகளை வென்று மாநில போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளனார். 
   இரு நீச்சல் பிரிவுகளில் மாநில போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவி தங்கம் ரூபினியை நீச்சல் பயிற்சியாளர் ராஜேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் நேயாலின்ஜான் உள்ளிட்டோர் 
வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com