தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார செவிலியர் மணிமாலாவின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோபி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மணிமாலாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.