புதிய நியாயவிலைக் கடை திறப்பு

ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொல்லம்பாளையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொல்லம்பாளையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கொல்லம்பாளையம் என்.ஜி.ஜி.ஓ. நகரில் மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகர், கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு  முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மேற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.இராமலிங்கம் தலைமை வகித்து மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தார். 
இதில், பகுதிச் செயலர்கள் கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், முருகுசேகர், சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மாதையன், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகி ஜீவா ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com