உலக நன்மை வேண்டி வெள்ளோடு அருகே மேட்டுப்பாளையத்தில் 108 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, ஸ்ரீ மகா கணபதி சதுர்லச ஜப மகா யாகம் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சங்கம் சார்பில், உலக நன்மை வேண்டி ஸ்ரீ மகா கணபதி சதுர்லச ஜப மகா யாகம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டை அடுத்த வி. மேட்டுப்பாளையத்தில் சதா மஹால் செல்வ விநாயகர் ஆலய வளாகத்தில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த யாக வேள்வியில் 108 சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு வேத மந்திரங்களை ஓதினர். வியாழக்கிழமை காலை தொடங்கிய யாக மந்திர வேள்வியானது வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.
வேள்விக்கான ஏற்பாடுகளை ஈரோடு கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சங்கத் தலைவர் சிவராம குருக்கள் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.