அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு ஆண்டுக்கான பருத்தி ஏல விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 435 மூட்டை பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இதில், பிடி காட்டன் ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 4,596 முதல் ரூ. 5,466 வரையில் ஏலம் போனது. மொத்த வர்த்தகம் ரூ. 7 லட்சத்துக்கு நடைபெற்றது.
தற்போது பருத்தி அறுவடை தொடங்கியுள்ளதால் வரும் வாரங்களில் அதிக அளவில் பருத்தி வரத்து இருக்கும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.