ஈரோடு கைகாட்டிவலசு பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மின்பகிர்மான வட்ட (நகரியம்) செயற்பொறியாளர் கோ.வா. பழனிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு, மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வில்லரசம்பட்டி மின் பாதையில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மின்மாற்றி மாற்றி அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கைகாட்டிவலசு, பாரதியார் நகர், அடுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.