தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
பவானியை அடுத்த கவுந்தப்பாடியிலிருந்து மலையேற்றத்துக்குச் சென்ற சென்ற விவேக், தமிழ்செல்வன் ஆகியோர் தீ விபத்தில் சிக்கியதில் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதையடுத்து, கவுந்தப்பாடியில் இவர்களின் வீடுகளுக்குத் திங்கள்கிழமை இரவுநேரில் சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அரசு சார்பில் தேவையான உதவிகள் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அப்போது, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி வட்டாட்சியர் சிவகாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.