தேர்தல் விதிமீறல் வழக்கு: முன்னாள் அமைச்சர் முத்துசாமி உள்பட 11 பேர் விடுதலை

தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் முத்துசாமி உள்பட திமுகவினர் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் முத்துசாமி உள்பட திமுகவினர் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
 சித்தோடு நான்குமுனைச் சாலையில் 2016-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது,  ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமி உள்பட 11 பேர் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
 ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3-இல் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், விதி மீறலுக்கு ஆதாரம் இல்லாத காரணத்தால் முத்துசாமி உள்பட 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com