வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
சித்தோடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சக்கரவர்த்தி (26). இவர், குமாரபாளையம் அருகே காகித ஆலை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்னர் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
மீண்டும் திங்கள்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டும், வீட்டுக்குள்  இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தன. மேலும், அதிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகையும் மாயமாகியிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com