காஞ்சிக்கோவில் அருகே நர்ஸ் மாயம்

பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலில் நர்ஸ் மாயமானார்.

பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலில் நர்ஸ் மாயமானார்.
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், செங்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (36). பெருந்துறை, சேனடோரியத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (33).இவர்,  பெருந்துறை, குன்னத்தூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்து வருந்தார். 
இந்நிலையில்,  வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து பிப்ரவரி 24-ஆம் தேதி சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லையாம். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினரது வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  இதையடுத்து, காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் அருணாசலம் செவ்வாய்க்கிழமை இரவு புகார் தெரிவித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மகாலட்சுமியைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com