சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தார்.
சத்தியமங்கலம், வரதம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரோஜா (82).இவர், மைசூரு சாலையில் செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற அவர் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில், மூதாட்டி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ராமபையனூரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் அருண்குமார் மீது சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.