ஈரோடு மகளிர் வார விழாவை முன்னிட்டு மகளிரை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, ஜேசிஐ அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு கோட்டாட்சியர் ஆர்.நர்மதா தேவி தலைமை வகித்தார்.
விழாவில், கல்வியாளருக்கான விருது மாலதி ராஜேந்திரனுக்கும், சமூக சேவைக்கான விருது, வி.உமா மகேஸ்வரிக்கும், இயற்கை விவசாயிக்கான விருது ஆர்.மேகலாவுக்கும், விளையாட்டு வீராங்கனைக்கான விருது வி.லேக்ஹா, எம்.கெளசல்யா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
முன்னதாக, ஈரோடு ஜேசிஐ அமைப்பின் தலைவர் ஜெ.சரவணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மண்டலத் தலைவர் சுகந்தி சரவணன் கலந்துகொண்டார். இதில், மகளிர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.