மக்களவைத் தேர்தல் பணி: திமுகவினர் ஆலோசனை

மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து, ஈரோடு மாவட்ட திமுக சார்பில்  நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து, ஈரோடு மாவட்ட திமுக சார்பில்  நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட  திமுக செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக  மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்கள், செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் இளித்துறை ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, மக்களவைத் தேர்தலில்  திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முழுமூச்சுடன் பணியாற்றுவது குறித்தும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் தேர்தலில் வெற்றி பெற எவ்வாறு களப் பணியாற்றுவது என்பது குறித்தும் யோசனை தெரிவித்தனர்.
இதில், துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாவட்ட அவைத் தலைவர் குமார்முருகேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சின்னையன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com