பெருந்துறை ஒன்றியம், கம்புளியம்பட்டி ஊராட்சி, கம்புளியம்பட்டி கிராமம் இ-சேவை மைய வளாகத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, பெருந்துறை வட்டாட்சியர் வீரலட்சுமி தலைமை வகித்தார். முகாமில், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் இருந்து 20 மனுக்கள் பெறப்பட்டன. இதில், அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பெருந்துறை வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.