சாலை விபத்தில் இருவர் சாவு

கோபி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

கோபி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
கோபியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் (55), பாலு (50). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் எலத்தூர், செட்டிபாளையத்தில் இருந்து நம்பியூருக்கு வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஐயப்பன், பாலு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கடத்தூர் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com