மாக்கம்பாளையத்தில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேரனை கடம்பூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த புட்டண்ணா (எ) சித்தன்ன கவுடர் (80). இவருக்கும், பேரன் கோவிந்தன் என்பவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், தாத்தாவிடம் கோவிந்தன் வெள்ளிக்கிழமை மாலை பணம் கேட்டதாகவும், அவர் மறுத்துவிட்டதால் சித்தன்னாவை கோவிந்தன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே சித்தன்ன கவுடர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கடம்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.