தென்னிந்திய யோகா போட்டி: சென்னிமலை கொங்கு பள்ளி சாம்பியன்

தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில் சென்னிமலை கொங்கு பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில் சென்னிமலை கொங்கு பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
தென்னிந்திய அளவிலான யோகா போட்டி திருப்பூர் ஜெயந்த் பப்ளிக் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சென்னிமலை, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிமாணவ, மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டு தங்கள் திறன்களை பதிவு செய்தனர். 
இப்பள்ளி மாணவர்கள் மிக அதிகமான புள்ளிகளைப் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம்  வென்றனர். மாணவர்களுக்கு சிறப்பாக யோகா பயிற்சியளித்த யோகா ஆசிரியர் காளியப்பனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற மாணவர்கள்,  ஆசிரியர் காளியப்பன் ஆகியோரை பள்ளித் தலைவர் ஆர்.கந்தசாமி, தாளாளர் வி.எஸ்.தங்கமுத்து , பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் ஆகியோர் வாழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com