கோபி சாரதா கல்வி நிறுவனங்களின் சார்பில், மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, சாரதா இண்டர்நேஷனல் பள்ளித் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாளாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். பள்ளிச் செயலர் சீதாலட்சுமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. அ.பாரி பேசியதாவது:
மாணவர்கள் எதையும் கற்றுக்கொள்ளும் முன்னர்அதன் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டும். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், தமிழறிவை செழுமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே நாவன்மையும், ஆளுமையையும் ஒரு மாணவரால் பெற முடியும் என்றார். இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொற்றோர் கலந்துகொண்டனர்.