அண்ணா பிறந்த நாள்: பல்வேறு கட்சியினர் மரியாதை

அண்ணா பிறந்த நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் சார்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.


அண்ணா பிறந்த நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் சார்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதில், ஈரோடு மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.பா.சச்சிதானந்தம், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் பருவாச்சி எஸ்.பரணிதரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதில், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பிரபு, செயற்குழு உறுப்பினர் ராஜா, மருத்துவ அணி செயலாளர் மனோகரன், பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மாவட்ட தலைவர் செல்வராஜ் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட செயலாளர் மயில்துரையன், பொருளாளர் ராமு, தொழிற்சங்க செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பவானியில்...: பவானி நகர அதிமுக சார்பில், அந்தியூர் - மேட்டூர் பிரிவில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்துக்கு, நகரச் செயலர் என்.கிருஷ்ணராஜ் தலைமையில், அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல, அந்தியூரில் திமுக சார்பில் ஒன்றியச் செயலர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் அக்கட்சியினர் அண்ணாவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மொடக்குறிச்சியில்...: மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை நால்ரோட்டில், மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக சார்பில், எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி தலைமையில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மு.க. சார்பில் மொடக்குறிச்சி நால்ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றிய கழகச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்து, தந்தை பெரியார், அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோபியில்...: கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அலுவலகத்தில் அண்ணாவின் படத்துக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்துறையில்...: பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில், அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று பெருந்துறை, பவானி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.பழனிசாமி, ஒன்றியச் செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திமுக சார்பில், ஒன்றியச் செயலாளர் கே.பி.சாமி தலைமையில், கழகப் பொருளாளர் துரைமுருகன், அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com