கூடலூரை அடுத்துள் பாடந்தொரை பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள்ள வெள்ளிக்கிழமை இரவு யானைகள் புகுந்தன.
பாடந்தொரை பகுதியிலுள்ள கனியன் வயல் கிராமத்திற்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த நான்கு யானைகள் அப்பகுதியில் உள்ள பாலன் என்பவரது வீட்டின் மதில் சுவரைத் தாண்டி அங்கு வைக்கப்பட்டிருந்த வாழை உள்ளிட்ட மரங்களைத் தின்று சேதப்படுத்தின.
தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் அப்பகுதியில்
உள்ள வயல்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களையும் தின்று சேதப்படுத்தின.