கூடலூரை அடுத்துள்ள இரண்டாவது மைல் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கஞ்சிக்கலய ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, குருப் பெயர்ச்சி ஹோமம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், உலக அமைதி வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.