சந்தனக் கட்டை பதுக்கியவர் தப்பியோட்டம்

கூடலூரில் சந்தனக் கட்டை பதுக்கியவர் வெள்ளிக்கிழமை தப்பியோடினார்.

கூடலூரில் சந்தனக் கட்டை பதுக்கியவர் வெள்ளிக்கிழமை தப்பியோடினார்.
 கூடலூர் பகுதியிலுள்ள அத்திப்பாளியில் சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வன அலுவலர் திலீப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கூடலூர், சேரம்பாடி வனச் சரகர்களை உள்ளடக்கிய தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். அத்திப்பாளி பகுதியல் சந்தனக் கட்டை பதுக்கியிருக்கும் வீட்டை வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்தபோது வீட்டின் உரிமையாளர் தப்பியோடிவிட்டார்.
 வீட்டில் சோதனையிட்டபோது 40 கிலோ சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வனத் துறையினர் சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com