இந்து மக்கள் கட்சிக் கூட்டம்

இந்து  மக்கள் கட்சி, அனுமன் சேனாவின் மாவட்டக் கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து  மக்கள் கட்சி, அனுமன் சேனாவின் மாவட்டக் கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ்.வி.ஸ்ரீதரன் பேசியதாவது:
 நீலகிரி மாவட்டம் முழுவதும் 208 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும். நீலகிரியில் பச்சைத் தேயிலைக்கு நியாய விலைக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 கூட்டத்தில், தமிழ் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், கேரள மாநிலத் தலைவர் சுரேஷ் ராஜ், மாநில மகளிரணி தலைவர் ராதா வாசுதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com