அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

பாதுகாப்புத் துறையில் மத்திய அரசின் போக்கைக்  கண்டித்து    அருவங்காடு  வெடிமருந்து  தொழிற்சாலை  ஊழியர்கள்,   மதிய உணவைப்  புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பாதுகாப்புத் துறையில் மத்திய அரசின் போக்கைக்  கண்டித்து    அருவங்காடு  வெடிமருந்து  தொழிற்சாலை  ஊழியர்கள்,   மதிய உணவைப்  புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.    
பாதுகாப்புத் துறையில் நூறு சதவீத  அன்னிய முதலீடு, தளவாடப்  பொருள்களைத்  தயாரிப்பதில் தனியார் நிறுவனங்களுக்கு  அனுமதி உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளுக்கு  எதிர்ப்புத் தெரிவித்து,  நீலகிரி மாவட்டம்,  குன்னூர் அருவங்காடு  வெடிமருந்து  தொழிற்சாலை ஊழியர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர்  செவ்வாய்க்கிழமை மதிய உணவைப் புறக்கணித்து  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
இதில்,  ஐஎன்டியூசி, சிஎப்எல்யூ  உள்ளிட்ட   அனைத்துத் தொழிற்சங்கங்களைச்  சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து  கொண்டனர். மேலும்,  அருவங்காடு,  உதகை சாலையில்  கண்டனப்  பேரணியும்  நடைபெற்றது.
நாடு முழுவதும்,  நான்கு லட்சம்  தொழிலாளர்கள் மதிய  உணவைப் புறக்கணித்து  இப்போராட்டத்தில்  ஈடுபட்டதாக  சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் அசோகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com