நீலகிரி
சிம்ஸ் பார்க் பழப் பண்ணையில் ஜாம் தயாரிக்கும் பணி தீவிரம்
குன்னூர் சிம்ஸ் பார்க் பழப் பண்ணையில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர் சிம்ஸ் பார்க் பழப் பண்ணையில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தோட்டக் கலைத் துறை பழப் பண்ணையில் பல்வேறு வகையான பழ மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், ஊட்டி ஆப்பிள், மாதுளை, பெர்சிமன், பீச், பிளம்ஸ், பேரிக்காய் உள்ளிட்டவை அடங்கும்.
தற்பொது, இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட மரங்களில் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்த மரங்களிலிருந்து 1,000 கிலோவுக்கு மேல் பேரிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. இதனால், பேரிக்காய் ஜாம் தயாரிப்புப் பணியில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரியில் விளையும் பேரிக்காய்களை பெங்களூருவில் சந்தைப்படுத்தவும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.