மஞ்சூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
மஞ்சூர், கிண்ணக்கொரை, தாய்சோலை, கேரிங்டன், பிக்கட்டி, தங்காடு, இத்தலார், எடக்காடு, எமரால்டு, காத்தாடிமட்டம், பெங்கால்மட்டம், தேனாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உதகை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தேவர்சோலை அஞ்சலகம் அருகே சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து விழுந்தது. இதனால், அச்சாலையில் வாகனங்கள் செல்வதில் நெருக்கடி ஏற்பட்டது.