எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, உதகையில் படகுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
உதகை படகு இல்லத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் படகுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடக்கி வைக்கிறார். இதில், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
ஆலோசனைக் கூட்டம்:
உதகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் உதகையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, அன்பழகன், செல்லூர் ராஜு , எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜுணன், டாக்டர் கோபாலகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர் ராமு ஆகியோர் பங்கேற்கின்றனர்.