மஞ்சூர் அருகே உள்ள மஞ்சக்கம்பை கிராமத்தில் நடைபெற்று வரும் தனிநபர் கழிப்பிட கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
மஞ்சூர் அருகே பாலகொலா ஊராட்சிக்கு உள்பட்ட மஞ்சக்கம்பையில் தனிநபர் கழிப்பிடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கண்ணழகன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பாலகொலா ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.