நீலகிரி
சர்வதேச இளைஞர் தின விழா
கூடலூர் கல்லூரியில் சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடலூர் கல்லூரியில் சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடலூரில், பாரதியார் பல்கலைக் கழக கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப் பணித் திட்டம், சமூகப் பணியியல் துறை, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் ஆகியவை சார்பில் இளைஞர் தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதற்கு, கல்லூரி முதல்வர் த.பழனிசாமி தலைமை வகித்தார். சமூகப் பணியியல் துறைத் தலைவர் பெஞ்சமின், ஆற்றுநர்கள் சத்தியன், முத்துச்செல்வன், வணிகவியல் துறைத் தலைவர்
கா.பழனிசாமி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். இதில், மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர்.