ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் த.சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.  மாவட்டச் செயலர் திவாகரன் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், ஆகஸ்ட்  22-ஆம் தேதி நடைபெறவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக அரசை நிர்பந்திப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக,  அண்மையில் உயிரிழந்த சங்க உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com