தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் த.சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் திவாகரன் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக அரசை நிர்பந்திப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அண்மையில் உயிரிழந்த சங்க உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.