உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவருக்கு திடீரென வலிப்பு வந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
உதகை அருகே மஞ்சனக்கொரைப் பகுதியைச் சேர்ந்த தனராஜ் மகன் கிருஷ்ணராஜ் (17). இவர் உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில், பள்ளியில் இருந்த கிருஷ்ணராஜ் வியாழக்கிழமை பகலிலிருந்தே சோர்வாக காணப்பட்டாராம். இதைத் தொடர்ந்து மாலையில் திடீரென அவருக்கு பள்ளியிலேயே வலிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அருகிலிருந்த மாணவர்கள், அவரை உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது கிருஷ்ணராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக உதகை நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.