பில்லூர்மட்டம் கிராமத்தில் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் சார்பாக பில்லூர்மட்டம் கிராமத்தில் மது அருந்துவோர் மறுவாழ்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.  

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் சார்பாக பில்லூர்மட்டம் கிராமத்தில் மது அருந்துவோர் மறுவாழ்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.  
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் பில்லூர்மட்டம் கிராமத்தில் மது அருந்துவோர் மறுவாழ்வு முகாம்  நடைபெற்றது.  
இதே கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் முகாம் நடைபெற்றபோது,  அப்பகுதியில் உள்ள மது அருந்துவோரின் எண்ணிக்கை,  அவர்களது  மனநிலை, தொடர்ந்து
மது அருந்துவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை  சேகரித்தனர். இந்நிலையில்,  வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் மேற்கண்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் மது அருந்துவோரில் தேவைப்படுவோருக்கு ஆலோசனை,  மருத்துவத் தேவை,  மதுவை மறந்து  எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கத் தேவையான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.   
இதற்கான ஏற்பாடுகளை வரலாற்று துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com