உலக சமுதாய சேவா சங்கத்தின் நிறுவனர் வேதாத்திரி மகரிஷியின் 107-ஆவது பிறந்த நாள் விழா கூடலூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, கூடலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் டி. திகம்பரம் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.பாக்கியநாதன் வரவேற்றார். பேராசிரியர் சி.பாஸ்கரன், ஆலோசகர் ஐ.சிவராஜ், ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் விஜயன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் தங்கமணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பொருளாளர் சண்முகவேல் நன்றி கூறினார். இதில், பேராசிரியர்கள் இந்திராதேவி, சுமிதா, மணி, சந்திரகலா, மணிகண்ட குமார் உள்ளிட்ட மனவளக்கலை மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.