தமிழ்நாடு ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில மாநாடு கோத்தகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு அறக்கட்டளையின் நிர்வாகச் செயலர் அல்போன்ஸ் ராஜ் தலைமை வகித்தார்.
இதில், ஆதிவாசி மக்களுக்கான அனைத்து சலுகைகளையும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆதிவாசி மக்கள் அனுபவித்து வரும் நிலத்துக்குப் பட்டா வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006-யை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆதிவாசி கிராமங்களுக்கு உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ்நாடு ஆதிவாசி கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆதிவாசி கூட்டமைப்பைச் சேர்ந்த கிருபாளினி நன்றி கூறினார்.