மஞ்சூரில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.
மஞ்சூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் முரளிதரன். இவரது மனைவி ருக்மணி (48). இவர், வெந்நீர் தேவைக்காக மின்சார ஹீட்டரை செவ்வாய்க்கிழமை காலை பயன்படுத்தி உள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் ருக்மணி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த மஞ்சூர் போலீஸார் ருக்மணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மஞ்சூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.