காவல் உதவி ஆய்வாளரைத்  தாக்க முயற்சி: மூவர் கைது

கோத்தகிரியில் வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்றதாக மூவரைக் காவல் துறையினர்  செவ்வாய்க்கிழமை  கைது  செய்தனர்.

கோத்தகிரியில் வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்றதாக மூவரைக் காவல் துறையினர்  செவ்வாய்க்கிழமை  கைது  செய்தனர்.
கோத்தகிரி, ராம்சந்த் பகுதியில் நிகழ்ந்த குற்றச் சம்பவம் தொடர்பாக  சிறப்பு காவல் ஆய்வாளர் தீபன் சக்ரவர்த்தி விசாரிக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ராதாகிருஷ்ணன் (25), உண்ணிகிருஷ்ணன் (22),  குமார் (22) ஆகிய மூவரும் தீபன் சக்ரவர்த்தியை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயற்சித்தனராம். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார்  மூவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com