நீலகிரி
கூடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி
கூடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
கூடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
கூடலூர் மனவளக்கலை மன்றத்தில் கல்வித் துறை உத்தரவின்பேரில் கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 18 அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி முகாமில் எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் போன்றவை கற்றுத் தரப்படுகின்றன.
பயிற்சியை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவரும் பேராசிரியருமான டி.திகம்பரம் தலைமயில் பேராசிரியர்கள் தங்கமணி, இந்திராதேவி, சந்திரகலா, சுமதி, துணைப் பேராசிரியர்கள் மணிகண்டன், மணி, மாலதி, அருள்நிதி சின்னசாமி ஆகியோர் பயிற்சியளிக்கின்றனர்.