பந்தலூரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் அடையாள அட்டை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாளஅட்டை பெறாதவர்களுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி பந்தலூர் அரசு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் தங்களது பாஸ்போர்ட் அளவிலான 4 புகைப்படங்களுடன், குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல், ஆதார் கார்டு அசல் மற்றும் நகலுடன் பங்கேற்றுப் பயனடையலாம்.