இரண்டரை வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதகை அருகே உள்ள முத்தொரை, பாலடா கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், பந்தலூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் இக்குழந்தைக்கு வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உதகையில் உள்ள ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மணியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.