ஆற்றில் மூழ்கி இளைஞர் சாவு

கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு - புன்னம்புழா ஆற்றில் மூழ்கி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு - புன்னம்புழா ஆற்றில் மூழ்கி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கூடலூர், கோழிப்பாலம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் ரமேஷ் (27). இவர், விநாயகர் சிலைகளை ஞாயிற்றுக்கிழமை மாலை விசர்ஜனம் செய்யும்போது நண்பர்களுடன் ஆற்றின் கீழ்பக்கம் உள்ள மறைவான பகுதியில் இறங்கியுள்ளார். அப்போது, ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவுதான் ரமேஷ் ஆற்றில் மூழ்கிய சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். கூடலூர் தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து ரமேஷின் சடலத்தை மீட்டு, பந்தலூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, தேவாலா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com