கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு, பாரதிநகர், அம்பேத்கர் நகர், காந்தி நகர், சக்தி நகர், கோவில்மேடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. சமீபகாலமாக பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்களை இந்த நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
எனவே, கிராமங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.