லாரி ஓட்டுநர் சங்க ஆலோசனைக் கூட்டம்

கோத்தகிரியில் லாரி ஓட்டுநர் சங்க ஆலோசனைக் கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.

கோத்தகிரியில் லாரி ஓட்டுநர் சங்க ஆலோசனைக் கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் கோத்தகிரி கிளைத் தலைவர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜன், பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
செப்டம்பர் 1-ஆம் முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், இதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.  இல்லையென்றால் அனைத்து லாரி,  சரக்கு வாகன ஓட்டுநர்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com