நீலகிரி வடக்கு வனக் கோட்டத்தில் தெங்குமரஹாடா பகுதியில் நட்சத்திர ஆமைகளைக் கடத்தியவருக்கு 9 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், தெங்குமரஹாடா பகுதியைச் சேர்ந்தவர் பண்டன் (47). பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் மீது, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தெங்குமரஹாடா பகுதியில் நட்சத்திர ஆமைகளைக் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ் வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பண்டனுக்கு 9 மாத சிறை த் தண்டனை விதித்து கோத்தகிரி நீதித்துறை நடுவர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.