பசுந் தேயிலைக்கு டிசம்பர் மாத விலையாக, 12 ரூபாய் 50 காசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பசுந் தேயிலைக்கு டிசம்பர் மாதத்துக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக, கிலோவுக்கு, 12 ரூபாய் 50 காசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை அனைத்து தொழிற்சாலைகளும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்; வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தேயிலை வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் ஆகியோர், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.