நீலகிரி மாவட்டம், மஞ்சூர்-கோவை சாலையில் முள்ளி சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை இரவு நடமாடிய யானைக் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மஞ்சூரிலிருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு வழித்தடம் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு வரும் மற்றொரு மாற்றுப் பாதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மஞ்சூர்-கோவை சாலையில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 3 குழுக்களாகப் பிரிந்து கெத்தை, வெள்ளியங்காடு, முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக நடமாடி வருகின்றன.
இந்நிலையில், முள்ளி சோதனைச் சாவடி அருகே குட்டியுடன் 4 யானைகள் வியாழக்கிழமை இரவு சுற்றித் திரிந்தன. சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக சோதனைச் சாவடி அருகிலேயே யானைகள்
முகாமிட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவை அடர்ந்த வனப் பகுதிக்கு சென்றன.